காதலியை தேடிவந்த காதலன் கைது

டிக்டொக் செயலி மூலம் காதலித்த காதலியை தேடிவந்த திருகோணமலையை சேர்ந்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியொருவரும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து காதலியின் வீட்டுக்கு சென்ற காதலன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், சித்தப்பாவின் பராமரிப்பிலேயே
இருந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதற்;கமைய, இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இளைஞனிடம் அடையாள அட்டை இல்லதாருப்பதும் தகவல் வழங்கலிலும் தடுமாற்றம் இருப்பதை அறிந்து அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரை இன்று (24) நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *