நுவரெலியாவில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்

நாட்டை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்­திட்டத்தின் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில்இ இன்று (17) நுவரெலியாவிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் கீழான பொலிஸ் அதிகாரிகள் குழுவினராலும், நுவரெலியா மாநகரசபை சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வையின் கீழ் மாநகசபை ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலும், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *