சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – 38 வயது நபர் கைது
சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 38 வயது நபரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பகுதியில் குறித்த நபர் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பொலிஸார் நேற்று (06) அவரை உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.