நுவரெலியா மாவட்டத்தில் 60% சத வீதம் வாக்கு பதிவு நிறைவு
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.
க.கிஷாந்தன்