குளவிக்கொட்டுக்கு இலக்காகி மாணவர் உயிரிழப்பு
பாடசாலை மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, 8 வயது மாணவர் உயிரிழப்பு
புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தில், பாடசாலை முடிந்து பெற்றோருடன் வீடு திரும்பிய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தரம் நான்கில் கல்வி பயிலும் 8 வயது மாணவர் ஒருவர் இன்று (28) காலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து புசல்லாவை மற்றும் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.