கெப் வாகனம் விபத்து: 8 பேர் காயம்

ராகலையிலிருந்து அம்பாறை, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனம் இன்று (20) விபத்துக்குள்ளானதில், கெப் வாகனத்தில் பயணித்த எட்டு பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வலப்பனை திரிபெஹா பொலிஸார் தெரிவித்தனர்.

ராகலை, உடுவாமதுரவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ​​வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் அவர்கள் பயணித்த கெப் வாகனம் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *