நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் 30 ஏக்கர் நிலம் எரிந்து சேதம்
க.கிஷாந்தன்
நல்லதண்ணி ஹமில்டன் பகுதியில் 23 ஆம் திகதி ஏற்பட்ட தீ பரவலில், கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் ஹட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே.ருக்க்ஷன் தெரிவித்தார்.

தீயை கட்டுப்படுத்த லக்க்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள், நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரின் உதவியுடன் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாகஇ வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால்இ தனது அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பொதுமக்களைத் தெரிவிக்குமாறு வனப்பகுதி காப்பாளர் வி.ஜே. ருக்க்ஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.