நுவரெலியாவில் பலத்த மழை – வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியாவில் இன்று (27) பிற்பகல் சுமார் ஒரு மணித்தியாலயம் இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக பிரதான வீதிகளில் சிறிது நேரம் போக்குவரத்துக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது .
இதில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் நுவரெலியா கண்டி, நுவரெலியா ஹட்டன் போன்ற பல பிரதான வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
மேலும் நுவரெலியாவில் சில தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அதிகமான விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது அத்துடன் அதிகமாக மரக்கறி வகைகள் வெள்ளத்தில் அள்ளுண்டுபோயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
