கழிவுப் பிரச்சினையால் மக்கள் அசௌகரியம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் அதிகரித்து வரும் கழிவுப் பிரச்சினையை எதிர்கொள்கிறது.
ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடுதாசிகள் என குப்பைகளாக உள்ளன.
யாத்திரிகர்கள் பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை வீதியில் விட்டுச் செல்வதால், துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சுகாதார பிரச்சனையாகி நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.