60 அடி கம்ப மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் இன்றுகாலை (27) நடைபெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின்போது 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் நபர் உயிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த முருகன் சதாசிவம் (வயது 63) என்பவர் எனவும் இவர் பொன்னர் சங்கர் கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *