வேட்பு மனுவை தாக்கல் செய்தது தேசிய மக்கள் சக்தி

க.கிஷாந்தன்

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி இன்று (20) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *