பயணச்சீட்டு மோசடியில் ஒருவர் கைது
ரயில் இணைய பயணச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கண்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் 32 வயதுடைய கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு ஈ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.