100க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுடன் கைது

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுடன் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

“போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” என்ற தொனிப்பொருளின் கீழ் வெவ்வேறு வகையிலான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களை கைது செய்வதற்காக தற்போது பல சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து ரயில், பஸ் உட்பட தனியார் வாகனங்களில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தருபவர்களை சோதனை செய்ய ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த சோதனைகளின் பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் வெவ்வேறான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில்இ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *