பயணிகள் அசௌகரியம்

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்கு இன்று (17 ) முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் அதிக பயணிகள் நானுஓயாவிக்கு வருகை காரணமாக புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.