ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

தியத்தலாவை பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடுஎன்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையிடையே அதிகாலை 4:15 மணியளவில் மோதியதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் ரயில் செல்லும் போது ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது போதே உயிரிழந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை அதே ரயில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *