மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து

மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியில் வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டதுடன்இ பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

விபத்தின்போது லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும்இ அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தினால் லொறியிலிருந்த 3 கியூப் மணலில் 1 கியூப் மணல் வீதியில் கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *