கால்வாயில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவின் ரோசிட்டா வட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் விழுந்து ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (26) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை, ரோசிட்டா வட்ட பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சடலம் டிக்கோயா கிளங்கள் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திம்புலபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 26 ஆம் தேதி பிற்பகல், பொலனறுவை பொலிஸ் பிரிவின் பத்தினி பிளேஸ் 02 பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவநகர மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

பொலனறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *