லொறியில் சிக்கி நபரொருவர் பலி : சாரதி தலைமறைவு

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) இரவு இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறி விபத்து நடந்த இடத்தில் இருப்பதாகவும் சாரதி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *